பல மாவட்டங்களில் பலத்தமழைக்கு வாய்ப்பு.

by Editor / 02-09-2022 08:38:03am
பல மாவட்டங்களில் பலத்தமழைக்கு வாய்ப்பு.

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 4 மற்றும் 5-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக்வும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via