சினிமா ஆசைகாட்டி 100-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை சீரழித்தநபர் கைது பெண்களின் ஆபாச வீடியோக்கள் சிக்கியது.

by Editor / 03-09-2022 08:21:26pm
சினிமா ஆசைகாட்டி  100-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை சீரழித்தநபர் கைது பெண்களின் ஆபாச வீடியோக்கள் சிக்கியது.

சேலம் மாவட்டம் வீரப்பன்பாளையத்தை சேர்ந்தவர் வேல் சத்ரியன் (38). இவர் , துணை நடிகை தேவை என்று விளம்பரம் செய்துள்ளார். இதை பார்த்த இரும்பாலை பகுதியை சேர்ந்த கனகா (30), வேலுவை தொடர்பு கொண்டுள்ளார். பின்னர் வேலு தனது அலுவலகத்தில் அவரை உதவியாளராக பணியில் சேர்த்து கொண்டனர். ஆனால் அவருக்கு சம்பளம் கொடுக்கவில்லை. கனகா சம்பளம் கேட்டபோது ஆபாச படத்தில் நடித்தால் பணம் தருவதாக கூறியுள்ளார். இதனால் வேலையை விட்ட கனகா சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கிருந்த வேலுசத்ரியன், அவரது உதவியாளர் ஜெயஜோதி ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி கடந்த 8 மாதங்களாக 300-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றி ஆபாசமாக படம் எடுத்து சீரழித்தது தெரிய வந்தது. மேலும் சினிமா ஆசைகாட்டி அங்கு வந்த பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்த சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வந்த பெண்களின் ஆபாச காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்குகள், ஆணுறை பாக்கெட்கள், லேப்டாப், கேமராக்கள், பெண் டிரைவ்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

முதலில் அந்த பெண்களை கிளாமராக நிற்க வைத்து படம் எடுப்பதும், பிறகு அவர்களை நிர்வாணப்படுத்தி வீடியோக்களையும் எடுத்துள்ளார். அப்போது நடிக்க கற்று கொடுப்பது போல், சில பெண்களை சீரழித்துள்ளார். சேலம், கோவை, திருப்பூர், கள்ளக்குறிச்சி, சென்னை என பல்வேறு இடங்களில் இருந்து வந்து இளம்பெண்கள் ஏமாந்துள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து இயக்குநர் வேல்சத்ரியன், உதவியாளர் ஜெயஜோதி ஆகியோர் மீது கொலைமிரட்டல் விடுத்தல், ஆபாச படம் எடுத்த கணினி குற்றம் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.  பின்னர் இருவரையும் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

தனியார் கட்டிடத்தில் வாடகைக்கு வீட்டை எடுத்து சினிமா கம்பெனி நடத்தி வந்துள்ளனர். அந்த வீட்டில் உள்ள அறைகளை ஆடம்பரமாக காட்ட இயக்குநர் வேல்சத்ரியன் பிரமாண்டப்படுத்தியுள்ளார். ஒரு அறையில் கேமரா, லைட்டிங் வசதி ஏற்படுத்த பட்டுள்ளது. அங்கு தான், இளம்பெண்களை ஆபாசமாக நிற்க வைத்து போட்டோ, வீடியோக்களை எடுத்துள்ளார். மற்றொரு அறையில் கட்டில், மெத்தை போன்றவையும் இருக்கிறது. வரவேற்பறையில் சினிமா கம்பெனியின் பெயர், அலமாரியில் ஷீல்டுகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.சொகுசான சோபா செட் போட்டு, அதில் அமர்ந்தபடி பேசுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இந்த பிரமாண்டத்தை பார்த்து நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த இளம்பெண்கள் ஏமாந்துள்ளனர்.

 

Tags :

Share via