கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலி
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பாரதி நகரை சேர்ந்தவர் சாகுல் ஹமீது மகன் கியாசுதீன் (19). தஞ்சை சரபோஜி கல்லுாரி தமிழ்த்துறை இரண்டாம் ஆண்டு மாணவர். விடுமுறையை முன்னிட்டு நண்பர்களான ஒரத்தநாடு ஆர்வி நகரை சேர்ந்த சிஃபான் (17), பள்ளிவாசல் தெருவை சேர்ந்த நூர்ஹமீம் (18) ஆகியோருடன் நெடுவாக்கோட்டை கல்யாண ஓடை ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது தண்ணீரின் வேகம் அதிகரித்து மூவரையும் ஆற்று நீர் இழுத்து சென்றுள்ளது. ஆற்றில் குளித்து கொண்டிருந்த சிலர் இதைக்கண்டு சிஃபான் மற்றும் நூர்ஹமீம் இருவரையும் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலின் பேரில் ஆற்றின் சுழற்சியில் சிக்கி மாயமான கியாசுதீனை ஒரத்தநாடு தீயணைப்புத்துறை நிலைய பொறுப்பு அதிகாரி ஜானகிராமன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் கியாசுதீனை கல்யாண ஓடை ஆற்றின் அருகே சடலமாக மீட்டனர். இது குறித்து ஒரத்தநாடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :