கருணாநிதி எழுதிய 4041 கடிதங்களை வெளியிடும் முதல்வர்
விருதுநகரில் வருகிற 15ம் தேதி மாலை நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் கலைஞர் கடிதங்கள் தொகுப்பு நூல்களாக வெளியிடப்படுகின்றன. இந்நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட அமைச்சர் துரை முருகன் பெற்றுகொள்கிறார்.
1968ல் தொடங்கி 2018 வரையில் கலைஞர், கட்சி தொண்டர்களுக்கு எழுதிய 4041 கடிதங்களின் தொகுப்பு நூல்களை சீதை பதிப்பகத்தில் உரிமையாளர் கவுரா ராஜசேகரன் புதுப்பித்துள்ளார். 21 ஆயிரத்து 510 பக்கங்களில் கலைஞர் எழுதிய அனைத்து கடிதங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. 54 தொகுதிகளாக அவை வெளிவந்துள்ளன
Tags :