சென்னை-பெங்களூரு வழித்தடத்தில் இன்று முதல் கூடுதல் விமான சேவை.

by Editor / 10-09-2022 10:06:03pm
சென்னை-பெங்களூரு வழித்தடத்தில் இன்று முதல் கூடுதல் விமான சேவை.

சென்னை-பெங்களூரு விமான வழித்தடத்தில் ஆகாசா என்ற ஏர் நிறுவனம், இன்று தனது விமான சேவையை தொடங்கியுள்ளது.இதன்மூலம், ஆகாசா ஏர் நிறுவனத்தின் விமான சேவை அளிக்கப்படும் 5வது நகரமாக சென்னை மாறியுள்ளது. சென்னை-பெங்களூரு வழித்தடத்தில் இருமார்க்கத்திலும் தினசரி இரு விமானங்கள் இயக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.சென்னை - கொச்சி இடையே அந்த நிறுவனம் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் விமான சேவையை தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 15ஆம் தேதி முதல் சென்னை - மும்பை இடையே தினசரி கூடுதலாக ஒரு விமானத்தை இயக்க உள்ளதாகவும், செப்டம்பர் 26ஆம் தேதி முதல் சென்னை-பெங்களூரு இடையே தினசரி கூடுதலாக ஒரு விமானத்தை இயக்க உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via