சைவ உணவக சாப்பாட்டில் எலி தலை இருந்த விவகாரம் உணவகத்தின் உரிமத்தை ரத்து செய்த அதிகாரிகள்

by Staff / 14-09-2022 12:10:19pm
சைவ உணவக சாப்பாட்டில் எலி தலை  இருந்த  விவகாரம் உணவகத்தின் உரிமத்தை ரத்து செய்த அதிகாரிகள்


 திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சைவ உணவகத்தில் பார்சல் சாப்பாட்டில் எலி தலை இருந்த சம்பவத்தில் ஆட்சியர் உத்தரவின் பேரில் உணவகம் மூடப்பட்டது .ஆரணி டவுன் பகுதியில் இயங்கி வந்த தனியார் சைவ உணவகத்தில் நேற்று முன்தினம் முரளி என்பவர் வாங்கி சென்ற சாப்பாட்டில் எலி தலை  இருந்த செய்தி வைரலானது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து நேற்று அந்த உணவகத்திற்கு சென்ற அதிகாரிகள் அதன் உரிமத்தை ரத்து செய்து மறு உத்தரவு வரும் வரை திறக்க கூடாது என்று கூறி உணவில் நோட்டீஸ் ஓட்டினார்.

 

Tags :

Share via