கஞ்சா போதையில் வீட்டை கொளுத்திய நபர்

by Staff / 16-11-2022 11:37:35am
கஞ்சா போதையில் வீட்டை கொளுத்திய நபர்

சென்னை காசிமேடு பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் கஞ்சா போதைக்கு அடிமையானதாக தெரிகிறது.
எப்போதும் கஞ்சா போதையில் வீட்டில் தகராறு செய்து வரும் அந்த நபர், இன்று அதிக போதையில் இருந்த போது, தன் வீட்டை தீயில் கொளுத்திவிட்டு, செல்போனில் தனது அம்மாவுக்கு போன் போட்டு வீட்டை கொளுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.இந்த தீ விபத்தில், வீட்டில் இருந்த பீரோ, கட்டில் உள்ளிட்ட அனைத்துப்பொருட்களும் எரிந்து நாசமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டை கொளுத்திய நபரை கைது செய்தனர்.

 

Tags :

Share via