கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்

by Staff / 15-09-2022 01:19:38pm
கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்


சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக பணியாற்றிய பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசாத் ரவூப், லாகூரில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 66. இவர் 2000 ஆம் ஆண்டில் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியிலும், 2005 ஆம் ஆண்டு தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியிலும் நடுவராக பணியாற்றினார். 2006 ஆம் ஆண்டில், ஐசிசியின் எலைட் பேனலில் இடம் பெற்ற அவர் 2013 வரை அங்கம் வகித்தார். அவர் 64 டெஸ்ட் போட்டிகள், 139 ஒருநாள் போட்டிகள், 28 டி20 போட்டிகள் மற்றும் 11 பெண்கள் டி20 போட்டிகளில் நடுவராக மற்றும் டிவி நடுவராக பணியாற்றினார். ஐபிஎல் போட்டிகள் உட்பட 40 முதல் தர போட்டிகள், 26 லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் 89 டி20 போட்டிகளிலும் அவர் நடுவராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via