பாலக்காடு - திருச்செந்தூர் ரயில் வழக்கம் போல இயங்கும்

by Editor / 22-09-2022 10:31:26am
பாலக்காடு - திருச்செந்தூர் ரயில் வழக்கம் போல இயங்கும்

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய நாட்களில் திருச்செந்தூர் - பாலக்காடு - திருச்செந்தூர் ரயில்கள் சாத்தூர் வரை இயக்கப்பட்டு பகுதியாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தப் பணிகள் நடைபெற தாமதமாகிறது. எனவே செப்டம்பர் 22 அன்று பாலக்காடு - திருச்செந்தூர் ரயில் (16731) மற்றும் திருச்செந்தூர் - பாலக்காடு ரயில் (16732) ஆகியவை வழக்கம்போல் இயங்கும்.

 

Tags :

Share via