ராகுலின் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு எதிரான மனு இன்று விசாரணை

by Staff / 22-09-2022 11:22:28am
ராகுலின் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு எதிரான மனு இன்று விசாரணை

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நடத்தும் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு எதிரான மனுவை கேரள உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு எதிரான மனுவை கேரள உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. இந்த பயணத்தால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், பயணிகளின் பிரச்னையில் உயர்நீதிமன்றம் தலையிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், முன்னாள் காவல்துறை அதிகாரியுமான விஜயன் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.சாலையின் முக்கிய பகுதியை எடுத்துக்கொண்டு இந்திய ஒற்றுமை யாத்திரை நடைபெறுகிறது. இதற்கு பதிலாக சாலையின் ஒரு பகுதியை மட்டும் பயணத்திற்கு விட்டுவிட்டு மற்ற பாதைகள் வழியாக போக்குவரத்தை எளிதாக்க பரிந்துரை செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்திய ஒற்றுமை யாத்திரை தற்போது கேரளாவின் ஆலப்புழாவில் நடக்கிறது

 

Tags :

Share via

More stories

Logo