ரயிலை நிறுத்தி பெண்ணை தாக்கி நகையை வடமாநில இளைஞர்கள் கொள்ளையடிக்க முயற்சி
திருமங்கலம்: திருமங்கலம் அருகே ஓடும் ரயிலை நிறுத்தி பெண்ணை தாக்கி நகையை கொள்ளையடிக்க முயற்சி செய்த வடமாநில இளைஞர்கள் தப்பி ஓடினர். திருநெல்வேலி மாவட்டம் கோபால சமுத்திரம் பகுதியை சேர்ந்த சுந்தரம் மனைவி லட்சுமி 51. இவர் திருநெல்வேலியில் இருந்து திருச்சிக்கு கணவருடன் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றார். திருமங்கலம் ஆறு கண் பாலம் அருகே ரயில் வந்த போது 25 வயது மதிக்கத்தக்க 3 வடநாட்டு இளைஞர்கள் லட்சுமியை தாக்கி அவரது கழுத்தில் இருந்த நகையை பறிக்க முற்பட்டனர்.
லட்சுமி கூச்சலிடவே, பயணிகள் அவர்களை பிடிக்க முற்பட்டனர். கொள்ளையர்களில் ஒருவர் ரயிலின் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினார். மூவரும் தப்பி ஓடினர். இதனால் 30 நிமிடம் ரயில் ஆறுகண் பாலத்திலே நிறுத்தப்பட்டது. இது குறித்து விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
Tags :