அரசு ஊழியரை தாக்கிய அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்கு

by Editor / 23-09-2022 10:45:57am
 அரசு ஊழியரை தாக்கிய அதிமுக  ஊராட்சி மன்ற தலைவர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்கு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றும் கருப்பையா என்பவரை அதிமுகவைச் சேர்ந்த கே.போத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உக்கிரபாண்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கிய சம்பவம் தொடர்பாக அரசு ஊழியர் கருப்பையா, உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் நேற்று இரவு புகார் மனு அளித்தார்.

இந்நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, அரசு ஊழியரை தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்தது என சுமார் 9 பிரிவுகளின் கீழ் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து ஊராட்சி மன்ற தலைவர் உக்கிரபாண்டியைத் தேடி வருகின்றனர்.

மேலும் ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்ய வலியுறுத்தி இன்று உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மதுரை மாவட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தை அறிவித்துள்ளனர். 

 

Tags :

Share via