தமிழகத்தின் வனப் பரப்பை 33 சதவீதமாக உயர்த்திட பசுமை தமிழ்நாடு என்ற இயக்கம் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
பசுமை தமிழ்நாடு இயக்கத்தைச் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் வனப் பரப்பை 33 சதவீதமாக உயர்த்திட பசுமை தமிழ்நாடு என்ற இயக்கம் தொடங்கப்படும் என்று இந்தாண்டு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
Tags :