பேருந்தில் ஏறிய நரிக்குறவர்களுக்கு பால் அபிஷேகம் செய்த நடத்துனர்..ஓட்டுனர்.

by Editor / 11-12-2021 11:09:07pm
பேருந்தில் ஏறிய நரிக்குறவர்களுக்கு  பால் அபிஷேகம் செய்த நடத்துனர்..ஓட்டுனர். கன்னியாகுமரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேருந்தில் ஏறி பயணம் செய்த ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்டு அவர்களின் உடமைகளை தூக்கி எறிந்த சம்பவம் இணையத்தில் வீடியோவாக வைரல் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அந்த சம்பவத்தின் உண்மைத்தன்மை தெரியவந்ததைத்தொடர்ந்து ஓட்டுநர்,நடத்துனர் உள்ளிட்ட 3பேர் பணிநீக்கம் செய்யபட்ட நிலையில் மீண்டும் அவர்களுக்கு பணிவழங்கஉத்தரவிட்ட நிலையில் இன்று சென்னை பெரம்பூரில் இருந்து பாரிமுனை நோக்கி சென்ற தடம் எண் 42 என்ற பேருந்து சென்ட்ரல் மோர் மார்க்கெட் பகுதியில் நின்றது. அப்போது நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 2 பேர் பேருந்தில் ஏறினர். அப்போது பேருந்து ஓட்டுனர் அப்துல் மன்னன் (60) என்பவர் அவர்களை பேருந்து உள்ளே வரும் படி கூறி உட்கார இருக்கை தந்தார். மேலும் அவர்கள் பாரிமுனை செல்ல வேண்டும் என்று கூறினர். அவர்களை பாரிமுனையில் இறக்கி விட்ட அப்துல் மன்னன் , நடத்துனர் மோகன் ஆகியோர் அவர்கள் எங்கே செல்ல வேண்டும் என்று விசாரித்தனர்.அப்போது அவர்கள் பெரம்பூர் வீனஸ் செல்ல வேண்டும் என்று கூறி உள்ளனர். அப்போது அங்கிருந்த பேருந்து தடம் எண் 242க்கு அழைத்து சென்றனர். அப்போது அப்துல் மன்னன் , மோகன் ஆகியோருடன் 242 பேருந்தின் ஓட்டுனர் சதிஷ் பாபு , நடத்துனர் பூமணி ஆகிய 4 பேரும் சேர்ந்து நரிக்குறவர் இனத்தை சேர்ந்த கணவன் மனைவி இருவருக்கும் காலில் பால் அபிஷேகம் செய்து தோலில் மாலை அணிவித்து குங்குமம் வைத்து பேருந்தில் ஏற்றினர். இது குறித்து அவர்கள் கூறுகையில், சமீப காலமாக பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர்கள் குறித்து ஒரு தவறான கண்ணோட்டம் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருவதால் அதனை போக்கவும் அனைத்து பயணிகளும் சமமுடன் நடத்துவதற்காகவும் இது போன்று செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பேருந்தில் ஏறிய நரிக்குறவர்களுக்கு  பால் அபிஷேகம் செய்த நடத்துனர்..ஓட்டுனர்.
 

Tags :

Share via