சென்னை புதிய விமான நிலையத்திற்கு காட்டும் அக்கறை மதுரை விமான நிலையதிற்கு காட்ட வேண்டும்:

by Staff / 04-10-2022 01:07:53pm
சென்னை புதிய விமான நிலையத்திற்கு காட்டும் அக்கறை மதுரை விமான நிலையதிற்கு காட்ட வேண்டும்:

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற தமிழக அரசு மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் வலியுறுத்தல். .மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக உருவாக்கிட மத்திய அரசு 550 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது, அந்த விமான நிலைய விரிவாக்கத்திற்கு 633. 17 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.  எடப்பாடியார்  ஆட்சியில், அயன்பாப்பாக்குடி, குசவன்குண்டு, பாப்பானோடை, ராமன் குளம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டா நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள் என 528. 65 நிலங்களை கையப்படுத்தி  ஒப்படைக்கப்பட்டது,

 90 சதவீதம் அளவில் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 104. 52 ஏக்கர் நிலங்களை நிலங்களை திமுக அரசு கையப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், கொரோனா காலகட்டத்தின் போது நிலம் எடுக்கும் பணி தாமதமானது, மத்திய அரசு எதிர்பார்க்கும் வகையில் திமுக அரசு ஒத்துழைப்பு கொடுக்க முன்வர வேண்டும். சென்னையில் புதிதாக உருவாக்கப்படும் விமான நிலையத்திற்கு காட்டும் அக்கறை மதுரைக்கு காட்ட வேண்டும் என்று தெரிவித்தாா்',

 

Tags :

Share via