கொரோனா நிதிக்கு முதலமைச்சரிடம் சங்கிலி கொடுத்த இளம் பெண்ணுக்கு பணி
மேட்டூர் அணையை திறக்க சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொரோனா நிவாரண நிதிக்கு தனது இரண்டு சவரன் தங்க சங்கிலியை கொடுத்த பொட்டனேரியை சேர்ந்த சௌமியா என்ற இளம்பெண்ணுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் வழங்கினார். பி.இ. கம்பியூட்டர் சயின்ஸ் படித்து முடித்துள்ள மாணவி சௌமியாவுக்கு முதலமைச்சர் அறிவித்தபடி பொட்டனேரியில் உள்ள ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்தில் பணி நியமனத்துக்கான ஆணையை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்புக்கொண்டு மாணவி சௌமியாவுக்கு வாழ்த்து கூறினார். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சௌமியா, ஓரிரு நாட்களிலேயே நடவடிக்கை எடுத்து பணி நியமன ஆணை வழங்கியது தமக்கு மகிழ்ச்சி அளித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, முதலமைச்சர் உறுதி அளித்தபடி தனியார் நிறுவனத்தில் பணி நியமன ஆணையை வழங்கியதாக கூறியுள்ளார்.
Tags :