ஆஸ்திரேலியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் உலக கிரிக்கெட் கோப்பையை அசாத்தியமாக வென்றது.

by Admin / 19-11-2023 09:21:27pm
ஆஸ்திரேலியா  ஆறு விக்கெட்  வித்தியாசத்தில் உலக கிரிக்கெட்  கோப்பையை  அசாத்தியமாக வென்றது.

இந்திய அணி வெற்றி பெறும் என்கிற நம்பிக்கையோடு நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் குவிந்திருந்த  ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேரினுடைய எதிர்பார்ப்பை இந்திய அணி தன்னுடைய பேட்டிங்கிலும். தன்னுடைய பில்டிங்கிலும் அதிகமாக கவன குறைவாக இருந்ததின் காரணமாக, இந்தியாவின் வெற்றி கைநழுவி போய்விட்டது. பத்து போட்டிகளில் வெற்றி பெற்று ஜாம்பவானாக இருந்த இந்திய அணி சாதாரண ஒரு விளையாட்டாகவே இந்த இறுதி போட்டியை எண்ணிவிட்டது போலும்.. ஆஸ்திரேலியா துணைப் பிரதமர் நேரில் போட்டியை காண வந்திருந்தது போன்று போட்டியின் இறுதி கட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வருகை புரிந்திருந்தார். சமீ ஒரு விக்கெட்டை வீழ்த்தவும் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்யை பும்ரா வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெறும் என்கிற நம்பிக்கையை கருத்துக்கணிப்பிலும் உருவாக்கிய நிலையில் ,அடுத்தடுத்து அவர்களுடைய அசமந்தமான பில்டிங் மிகச் சாதாரணமாக ஆஸ்திரேலியாவை வெற்றியடைய செய்துவிட்டது

.ஆறாவது முறையாக ஆஸ்திரேலியா உலக கோப்பையை வென்று சாதனை.

ஆஸ்திரேலியா  ஆறு விக்கெட்  வித்தியாசத்தில் உலக கிரிக்கெட்  கோப்பையை  அசாத்தியமாக வென்றது.
 

Tags :

Share via