அரசு கல்லூரி மாணவர் ரெயில் மோதி பலி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணநகரில் அரசு அறிவியல் மற்றும் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கழுகுமலையைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரது மகன் பாலகணேஷ் பி.ஏ. ஆங்கிலம் 2ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இன்று கல்லூரிக்கு கழுகுமலையில் இருந்து பஸ்சில் பாலகணேஷ் சென்றுள்ளார். இனாம்மணியாச்சி பஸ் நிறுத்தத்தில் இறங்கி கல்லூரி செல்வதற்காக அருகில் இருந்த ரெயில்வே தண்டவாளத்தினை கடக்க முயன்ற போது நாகர்கோவில் - கோவை விரைவு ரெயில் அவர் மீது மோதியதில் பாலகணேஷ் பரிதபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் கிடைத்தும் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று மாணவரின் உடலைமீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு கல்லூரிக்கு இயக்கப்பட்டு வந்த 2 அரசு பஸ்கள் கொரோனாவிற்கு பிறகு நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் தண்டவாளத்தினை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
Tags : கல்லூரி மாணவர் ரெயில் மோதி பலி