தெளிவில்லா மனம் ! உயர்ந்த இடம் சென்றடையாது !!

by Editor / 06-10-2022 11:55:56pm
தெளிவில்லா மனம் ! உயர்ந்த இடம் சென்றடையாது !!

சித்தர்வழி என்பது மனித இனம் மொத்தத்திற்குமே ஆனது ஒழிய !!

யாருக்காவது இதில் ஜாதி ! மதம் ! இனம் ! மொழி ! நிறம் ! வசதி ! சொத்து ! நிலம் ! அழகு ! வேறுபாடு ! பாகுபாடு ! கட்சி ! அரசியல் ! பதவி ! பணம் !! இவற்றிற்கு அப்பாற்பட்டது "இறை" புரிதல்நன்று !!

இதில் ஏதேனும் வேறுபாடோ ? பாகுபாடோ ? உங்களுள் இருந்தால் ?!!

நீங்கள் இன்னும் "பதப்படவில்லை" என்றே அர்த்தம் !!

இன்னும் சித்தர்வழி ! ஞானவழி ! வாசலுக்கு கூட வரவில்லை என்பதே உண்மை !!

அணியும் மணிகளோ ? பட்டையோ ? அடையாளங்களோ ? இறையிடம் உம்மை அழைத்துச்செல்லாது !!

இறைக்கும் ! இயற்கைக்கும் பயந்து நடந்து கொள்ளும் முறை மட்டுமே ? மறைந்து இருக்கும் இறை ரகசிய சக்திகளை உங்களுக்கு உணர்த்தும் !!

எந்த சித்தர்களும் ? ஞானிகளும் ! மேற்கூறிய எந்த பாகுபாடுகளையும் யாரிடமும் காட்டியதே இல்லை !!

அதனால்தான் அவர்கள் இறை பலமும் ! இயற்கை பலமும் ! பெற்று பஞ்சபூதங்களை வசியப்படுத்தி ! சிறந்து உயர்நிலை அடைந்தனர் !!

உலகில் பெரும்பாலோரின் நம்பிக்கை ! "இறைவன் தன்னுடைய உருவ அமைப்பை மனிதனுக்கு கொடுத்து அழகு பார்ப்பதாக நம்பப்படுகிறது !!

இன்னும் சரியாக சொல்லப்போனால் ? நீ எதை வெறுப்பாயோ ? அதில் அவனின் ஆற்றல் அதிகரித்து ! உன்னை அடைந்து ! உன்னை பரிசோதிக்கும் ! "இறை சக்தி" !!

வேறுபாடும் ! பாகுபாடும் ! தெரியாத "மனிதனை ! மனிதனாக" ? மட்டுமே காணும் எண்ணம் உன்னுள் வந்துவிட்டால் ? மனிதம் உன்னுள் ஆழப்பிரவேசிக்க துவங்கி விட்டதாக நினைவில்கொள் ! இதுவே உன் முதல்படி !!

நீ அப்பொழுது உன் வேறுபாடு ! பாகுபாடுகளை காட்டிக்கொண்டு இருந்தால் ? இறை எப்படி உன்னை நெருங்கும் ?

இப்பொழுதெல்லாம் பாருங்கள் பல பூஜைகளை ! பல கோடிகள் செலவு செய்து ! பூஜித்தவர்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாக நேரிடுகிறது ! காரணம் ? மனதில் "இயற்கை இறை" பயமில்லாதது மட்டுமே அன்றி வேறு என்ன ?

அனைத்து அடையாளங்களை மாட்டிக்கொண்டு நடிகராகலாம் ? ஆனால் ? இறைவனிடம் சரணாகதி அடையமுடியாது !!

பலருக்கும் தொடங்கிய இடம் வேறு ? சென்று சேருமிடம் வேறாகவே அமைந்துவிடும் ! சித்தர்வழி !!

 

Tags :

Share via