அரசு தீவிரமாக ஈடுபட்டு இளம் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் திருமாவளவன்

by Staff / 07-10-2022 01:38:31pm
 அரசு தீவிரமாக ஈடுபட்டு இளம் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் திருமாவளவன்

சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெலுங்கான 'ராஷ்ரிய சமிதியின் தேசிய கட்சி துவக்கவிழாவில் கலந்துகொண்டேன்
இதில் ஜனநாயக சக்திகள் மதவாத சக்திகளுக்கு எதிராக ஒரு அணியில் திரள நடைபெற்ற கூட்டமாகும்
கர்நாடகத்திலிருந்து குமாரசாமி கவுடா. மற்றும் மற்றும் தேசிய அளவிலான விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.மண்டல் கமிஷன் தலைவர் V. P மண்டல், பகுஜன் சமாஜ் தலைவர் கான்சிராம் அவர்களுக்கு சிலை வைக்க கோரிக்கை விடுத்தேன்.வரும் 2024ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து ஜனநாயக சக்திகளும் வாக்குகளை சிதறாமல் பெற மேற்கொள்ள வேண்டும் இதற்கு விடுதலை சிறுத்தைகள் துணை நிற்போம்

எனது தலைமையில் நாளை 4 மணியளவில் பாஞ்சான்குளம் பகுதியில் சாதிய கொடுமைகளை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெறும்.பாஞ்சான் குளம், குறிஞ்சான்குளம் பகுதிகளில் ஊர் கட்டுபாடு என்ற பெயரில் சாதியின் பெயரால் சமுக புறக்கணிப்பை நடத்திய அனைவரையும் கைது செய்ய வேண்டும்

25 ஆண்டுகள் நடைபெற்ற சாதிய கொடுமைகளில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும்.
காவல்துறை ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது. அனைவரையும் கைது செய்ய வேண்டும்.கோவையில் நாளை நடைபெறும் எனது மணிவிழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி முத்துச்சாமி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து செயல்படுகிறதோ அதே போல் பிற மாநிலங்களிலும் செயல்பட வேண்டும் என விடுதலை சிறுத்தை சார்பில் வலியிறுத்துகிறோம்.இன்றைய தமிழ் சமுகத்தில் தமிழ் சமுகம் சமஸ்கிருத சக்திகளால் திணிக்கப்படுகிறது என்பதை இயக்குநர் வெற்றிமாறன் கூறினார் அய்யன் திருவள்ளுவர் சிலை காவி உடுத்துவது. மாமன்னன் ராஜராஜன் இந்து எனபடுத்துவது ஆபத்தானதுசனாதனமான முறைகளை சமஸ்கிருத மாயமாதலை கண்டிக்கும் விதமாக அமைத்தது.

 

Tags :

Share via