10 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்

by Staff / 08-10-2022 02:30:16pm
 10 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள அம்மாசத்திரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மொத்தமாக குடோனில் பதுக்கி வைத்து சிறு, சிறு பாக்கெட்டுகளாக தயார் செய்து விற்பனை செய்யப்படுவதாக திருவிடைமருதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருவிடைமருதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் அம்மாசத்திரம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள ஒரு குடோனில் சுமார் 10 டன் எடையுள்ள பல லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் சிறு, சிறு பாக்கெட்டுகளாக தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அந்த புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via