தாய் ஓட்டிய கார் மோதி 3 வயது சிறுமி பலி

by Staff / 15-10-2022 10:31:54am
தாய் ஓட்டிய கார் மோதி 3 வயது சிறுமி பலி

கோழிக்கோடு அருகே தாய் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் மூன்று வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
வெள்ளிக்கிழமை காலை கொடுவள்ளி அருகே ஈங்கப்புழாவைச் சேர்ந்த நசீர் மற்றும் நெல்லம்கண்டியைச் சேர்ந்த லுப்னா பெபினி ஆகியோரின் மகள் மரியம் நசீர் (3) என்ற சிறுமி விபத்தில் சிக்கி பலியானார்.

வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது கார் மோதியது. குழந்தையின் தாய் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உடனடியாக சிறுமியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், அங்கு சிறுமி உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via