சின்னத்திரை நடிகர் அர்னவ் கைது

by Admin / 14-10-2022 11:52:23pm
சின்னத்திரை நடிகர் அர்னவ் கைது


செல்லம்மா தொலைக்காட்சித்தொடரில் கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் நைனா முகம்மது என்கிற அர்னவ்சின்னத்திரை நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இருவரும் வெவ்வேறு மதத்தைச்சார்ந்தவர்கள் என்பதால் ,அர்னவ் திவ்யாவை  இஸ்லாம் மதத்திற்கு மாற்றித் திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவரும் தனியாக அடுக்குமாடிக்குடுியிருப்பில் வசித்து வந்தனர்.இந்நிலையில் திவ்யா கர்ப்பமுற்றார் .இதனிடையே இருவருக்கும் கருத்து முரண்பாடு உருவானது.ஒரே வீட்டிலிருந்தாலும் இருவரது வாழ்க்கையில் இன்னொரு சின்னத்திரை நடிகை புகுந்ததால்,பிரச்சனை வெடித்தூ பூதாகரமானது.திவ்யா ,காவல்ஆணையர் அலுவலகத்தில் தன்னை கர்ப்பிணி என்றும் பாராமல் துன்புறுத்தி,கொடுமைப்படுத்தூவதாக புகார் அளித்ததோடு,ஊடகங்களுக்கூம் பேட்டி அளித்தார்இதனைத்தொடர்ந்து அர்னவ்  ஆவடி காவல் ஆணையர்அலுவலகத்தில் தன் மனைவியை ஈஸ்வரன் என்பவரிடமிருந்து மீட்டுத்தரவேண்டும் .நான் என் மனைவியோடு சேர்ந்து
வாழவே விரும்புகிறேன்.அவரைச்சுற்றியுள்ள  நண்பர்களிடமிருந்து  திவ்யாவை மீட்டுத்தரக்கோரியிருந்தார்.இந்றிலையில்நடிகர் அர்னவ்  மீது பல பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டது.நேற்று  அவரை காவல் நிலையத்தில் நேரில் விசாரணைக்குஆஜரா கடிதம் அனுப்பட்டிருந்தது  .ஆனால்,அவர் ஆஜராக வில்லை.இதனைத்தொடர்ந்து அவரை செல்லம் மா படப்பிடிப்பு தளத்திற்குச்சென்ற காவல் துறையினர்  அவரைக்கைது செய்து அம்பத்தூர் சிறையில் அடைத்தனர்அதற்கு முன்னதாக அவரது உடல் முழுப்பரிசோதனைக்கு  உட்படுத்தப்பட்டது என்பது  குறிப்பிடத்தக்கது

 

Tags :

Share via