ரிதன்யா தற்கொலை: மாமியாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

by Editor / 11-07-2025 12:49:48pm
ரிதன்யா தற்கொலை: மாமியாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

ரிதன்யா தற்கொலை வழக்கில் சிறையில் உள்ள அவரது மாமியாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் அருகே அவிநாசியில் வரதட்சணை கொடுமையால் ரிதன்யா என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது கணவர், மாமனார், மாமியார் கைதான நிலையில் மாமியார் சித்ராதேவி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 

Tags :

Share via
Logo