மருத்துவமனையின் மேற்கூரையில் 200க்கும் மேற்பட்ட சடலங்களால் பரபரப்பு
பாகிஸ்தானின் பஞ்சாப் முல்தானில் உள்ள நிஷ்தார் மருத்துவமனையில் உள்ள பிணவறையின் கூரையில் அழுகிய 200க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 200 உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து பாகிஸ்தானின் பஞ்சாப் முதல்வர் ஆலோசகர் தாரிக் ஜமான் குஜ்ஜார் ஊடங்களுக்கு தகவல் அளித்துள்ளார். என்ன நடக்கிறது என்பதை விளக்குமாறு மருத்துவர்களிடம் கேட்டதாகவும், இவை மருத்துவ மாணவர்களால் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் குஜ்ஜர் கூறினார்.
சவக்கிடங்கை இறுதியாகத் திறந்தபோது, குறைந்தது 200 உடல்கள் துணிகள் எதுவும் சுற்றப்படாமல் அழுகிய நிலையில் கிடந்ததை கண்டு மிரண்டு போனார். மொட்டை மாடியில் இருந்த இரண்டு உடல்கள் சிதைவின் ஆரம்ப கட்டத்தில் இருந்தன. அவை முழுவதும் புழுக்களால் சூழப்பட்டிருந்ததாகவும், தனது 50 ஆண்டுகால வாழ்க்கையில் இதுபோன்ற எதையும் பார்த்ததில்லை எனவும் கூறியுள்ளார்.
நெஞ்சை உலுக்கும் சம்பவம் குறித்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், "திறந்த வெளியில்" வீசப்பட்டு உடல்கள் அழுகியதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரிக்க 6 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து சிறப்பு சுகாதாரத்துறை செயலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சிறப்பு சுகாதாரப் பாதுகாப்பு கூடுதல் செயலர் முஸாமில் பஷீர் தலைமையிலான இந்தக் குழு, அதன் அறிக்கையை மூன்று நாட்களுக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags :