மருமகள் நடத்தையில் சந்தேகம்.. பேத்தியை கொன்ற பாட்டி

by Staff / 21-07-2024 12:41:46pm
மருமகள் நடத்தையில் சந்தேகம்.. பேத்தியை கொன்ற பாட்டி

அரியலூர் மாவட்டம் கோட்டைகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இவருக்கு சந்தியா (21) என்ற மனைவியும், மோனிஷ் (2), கிருத்திகா (1) என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கிருத்திகா வாயில் மணல் திணிக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து சந்தியா அளித்த புகாரின் பேரில் அவரின் மாமியார் விருத்தம்பாளை (60) போலீசார் பிடித்து விசாரித்ததில், மருமகள் நடத்தையில் சந்தேகம் இருந்ததால் ஆத்திரமடைந்து கொலை செய்தேன் என ஒப்புக்கொண்டார்.

 

Tags :

Share via