200 கிலோ நிலக்கரியை சுமக்கும் இளைஞர்களுடன் ராகுல்
இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின்போது ஜார்கண்ட் மாநில எல்லையில் ராகுல் காந்தி, நிலக்கரி சுமை ஏற்றிய மிதிவண்டிகளுடன் சென்ற இளைஞர்களுடன் கலந்துரையாடினார். பின் அதுகுறித்து தனது X பக்கத்தில், நாள்தோறும் 200 கிலோ எடையுள்ள நிலக்கரியை மிதிவண்டிகளில் சுமந்து கொண்டு 400 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் இந்த இளைஞர்களின் வருமானம் பெயரளவுக்குதான் உள்ளது. அவர்களுடன் நடக்காமல், அவர்களின் சுமையை உணராமல் அவர்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ள முடியாது. இளம் தொழிலாளர்களின் வாழ்க்கை வீழ்ச்சியடைந்தால், நாட்டின் கட்டமைப்புச் சக்கரம் நின்றுவிடும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Tags :