திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் நாளை தொடங்குகிறது.

by Editor / 10-08-2022 11:31:33am
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் நாளை தொடங்குகிறது.

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலையை சுற்றி 14 கி.மீ கிரிவலம் செல்வார்கள். மாதந்தோறும் வரும் பவுர்ணமி மட்டுமின்றி முக்கிய விசேஷ நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி 11ம் தேதி நாளை (வியாழக்கிழமை) காலை 10.16 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு நிறைவடைகிறது. பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவதற்காக முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via