போலீஸ் கார் மோதி சம்பவ இடத்திலேயே பலியான இளைஞர்.

by Staff / 15-05-2024 05:19:39pm
போலீஸ் கார் மோதி சம்பவ இடத்திலேயே பலியான இளைஞர்.

உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் சாலை விபத்து ஒன்று நடந்துள்ளது. பிரதாப்கரில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் மீது போலீஸ் கார் மோதியது. இந்த விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், இரண்டு குழந்தைகள் பலத்த காயமடைந்தனர். தந்தை சம்பவ இடத்திலேயே இறந்ததால் குழந்தைகள் நடுரோட்டில் கதறி அழுது கொண்டிருந்தனர். படுகாயமடைந்த குழந்தைகளை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இறந்தவர் பற்றிய விவரம் இன்னும் தெரியவில்லை.

 

Tags :

Share via