மீன்கள் விலை உயர்வால் விற்பனை மந்தம் 

by Editor / 04-03-2023 09:35:39am
மீன்கள் விலை உயர்வால் விற்பனை மந்தம் 

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் தொடரும் காற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாத நிலையில் 3-நாட்களுக்கு பின் கடலுக்கு மீன்பிடிக்க சென்று கரை திரும்பிய பைபர் படகுகளில் போதிய மீன்கள் கிடைக்காமல் வரத்து குறைந்து குளச்சலில் மீன் விலை உயர்ந்து 1-கிலோ வஞ்சிரம் மீன் 1300-ரூ க்கும், விளை மீன் 200-ரூ க்கும், சூரை மீன் 200-க்கும், வாளை மீன் 120-ரூ க்கும், விற்பனைஆகி வருகின்றது.விலை உயர்வால் ஏற்றுமதி நிறுவனங்கள் மீன்களை வாங்க முன் வராததால் ராட்சத மான மருத்துவ குணம் கொண்ட திருக்கை மீன்கள் விலை சரிந்துள்ளது.6 எண்ணம் கொண்ட 2.5 டன் எடையுள்ள திருக்கை மீன்கள் வெறும் 20-ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.ஒருகிலோ 2ஆயிரம் ரூபாய்வரை விலைபோகும் இந்த மீன்கள் இன்று விலைசரிந்துள்ளதால் மீனவர்கள் வேதனையடைந்துள்ளனர்.

 

Tags :

Share via