சிறுவனிடம் கஞ்சா பறிமுதல்

by Staff / 17-10-2022 01:17:19pm
சிறுவனிடம் கஞ்சா பறிமுதல்

ஈரோட்டில், கஞ்சா வைத்திருந்த பள்ளி சிறுவன் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நாமக்கல் மாவட்டம் எருமபட்டி, பழையபாளையம் பகுதியை சேர்ந்த, 16 வயது சிறுவன், அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். ஈரோட்டில் நேற்று காலை பைக்கை தள்ளிச்சென்றார். அப் போது ரோந்து சென்ற கருங்கல்பாளையம் போலீசார், சிறுவனை நிறுத்தி விசாரித் தனர். அவனிடம், 120 கிராம் கஞ்சா இருந்தது. கஞ்சா, பைக்கை பறிமுதல் செய்தனர். சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

 

Tags :

Share via