7 மாத கைக்குழந்தையை கடித்து கொன்ற தெருநாய்

by Staff / 18-10-2022 03:17:16pm
7 மாத  கைக்குழந்தையை கடித்து கொன்ற  தெருநாய்

கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல பகுதிகளில் தெருநாய்கள் குழந்தைகள் உள்பட மனிதர்களை கடித்து குதறி வருகிறது.அந்த வகையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் 7 மாத கைக்குழந்தையுடன் தம்பதி வேலைக்கு சென்றனர். குழந்தையை தூங்கவிட்டு இருவரும் வேலை பார்த்தனர். அப்போது, தெருநாய் ஒன்று குழந்தையை கடித்து குதறியது. இதனால் படுகாயமடைந்த குழந்தையை பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை மரணம் அடைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் கதறி அழுத காட்சியை பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

 

Tags :

Share via