மனைவிக்கு பாசத்தில் தத்ரூபமாக சிலை வைத்த கணவர்
மதுரை அண்ணாநகர் வைகை காலனி பகுதியை சேர்ந்தவர் மார்கண்டன். இவரது மனைவி ருக்மணி மார்க்கண்டன். பொதுப்பணித்துறையில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.மார்க்கண்டனுக்கும், ருக்மணிக்கும் 1969ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஒரு ஆண் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். மேலும் அவர்களுக்கு பேரன் பேத்திகள் கொள்ளு பேத்திகளும் உள்ளனர்.இந்த நிலையில் ருக்மணி உடல்நலமின்றி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் மரணம் அடைந்தார்.இதனைத்தொடர்ந்து மனைவியின் பிரிவால் தாங்க முடியாத வேதனை அடைந்த மார்க்கண்டன் மனநலம் பாதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இருந்துள்ளார்.இதனைத்தொடர்ந்து உரிய சிகிச்சை மற்றும் குடும்பத்தினரின் கவனிப்பால் தேறிய மார்க்கண்டன் மறைந்த தனது மனைவிக்கு சிலை அமைக்க முடிவு செய்துள்ளார்.மனைவியை ஒரு நிமிடம் கூட மறக்க மனமில்லாமல் அவர் நினைவாக மனைவியின் உருவத்தை தத்துரூபமாக சிலையாக வடித்துள்ளார். 5 லட்ச ரூபாய் செலவில் தனது மனைவி ருக்மணிக்கு சிலை செய்து அதனை தனது வீட்டிலேயே வைத்துள்ளார்.மனைவியின் சிலையை செய்து அதை எப்போதும் பார்க்கும் வகையில் வீட்டிலேயே சிலை நிறுவி உள்ள பாசக்கார கணவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags :