ஆந்திராவில் 144 தடை உத்தரவு

by Staff / 11-09-2023 02:24:17pm
ஆந்திராவில் 144 தடை உத்தரவு

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சியினர் ஆந்திராவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். இந்நிலையில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த கட்சியினர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து ஆந்திரா மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆளுநரின் அனுமதி இன்றி சந்திரபாபு நாயுடுவை கைது செய்ததால், அது செல்லாது எனவும் கூறப்படுகிறது.
 

 

Tags :

Share via