பாசிச சக்திகளுக்கு எதிராக போராட வேண்டும்.- மல்லிகார்ஜுன கார்கே

by Editor / 19-10-2022 09:41:31pm
பாசிச சக்திகளுக்கு எதிராக போராட வேண்டும்.- மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- வகுப்புவாத போர்வையில் ஜனநாயக அமைப்புகளை தாக்கும் பாசிச சக்திகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும். கட்சியில் பெரியவர், சிறியவர் என அனைவரும் கட்சித் தொண்டர்களைப் போல் நாம் அனைவரும் ஒத்துழையுடன் உழைக்க வேண்டும். என்னுடன் போட்டியிட்ட சசி தரூரை வாழ்த்த விரும்புகிறேன். அவரைச் சந்தித்து கட்சியை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்று ஆலோசித்தேன். அனைத்துக் கட்சி தொண்டர்கள் சார்பாக சோனியா காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, பிரியங்கா காந்தியிடம் வாழ்த்து பெற்றார்.

 

Tags :

Share via