கோவில்களில் பலத்த பாதுகாப்பு.

by Staff / 25-10-2022 02:56:40pm
கோவில்களில் பலத்த பாதுகாப்பு.

கோவையில் கார் வெடித்த சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கார் வெடிப்பு சம்பவம் கோவில்களை குறி வைத்து நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து சென்னையில் உள்ள முக்கிய கோவில்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், பாரிமுனை காளிகாம்பாள் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் உள்பட முக்கிய கோவில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via