நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீபுக்கு சிக்கல்
வழக்கின் 8வது குற்றவாளியான திலீப் மற்றும் சக குற்றவாளியான சரத் ஆகியோர் தொடர்ந்த வழக்கின் விசாரணை அறிக்கையை நிராகரிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், திலீப் மற்றும் சரத் மீதான குற்றச்சாட்டுகள் தொடரும் என்று கூறியது.இந்த மனு மீது செஷன்ஸ் நீதிபதி ஹனி எம்.வர்கீஸ் தீர்ப்பு வழங்கினார். மேலும், குற்றப்பத்திரிகையை படிக்க திலீப்பும் சரத்தும் வரும் 31ம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 10-ம் தேதி விசாரணை தொடங்கும்.
Tags :