மர்மமான முறையில் கர்ப்பிணி மரணம்

by Staff / 31-10-2022 11:38:33am
மர்மமான முறையில் கர்ப்பிணி மரணம்

ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே உள்ள ராயபாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (26). இவரும், பிருந்தா (23) என்பவரும் கடந்த 1.5 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் ராயபாளையத்தில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். பிருந்தா தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி கார்த்தி, திண்டுக்கல்லில் நடைபெற்ற உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்று விட்டார். இதனால் பிருந்தா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அன்றிரவு தனியார் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் உணவை ஆர்டர் செய்து சாப்பிட்ட பிருந்தா, பின்னர் தூங்க சென்றுள்ளார்.இந்நிலையில் மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து பிருந்தாவின் தாய் மற்றும் அவரது கணவர் கார்த்திக்கு தகவல் அளித்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பிருந்தா உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதனை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். தகவலறிந்த சித்தோடு போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Tags :

Share via