தங்கப்பழம் சட்டக்கல்லூரி திறப்பு விழா.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் தங்கப்பழம் கல்வி குழுமத்தின் சார்பில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன.இதன் தொடர்ச்சியாக தற்பொழுது தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்து வந்த சட்டக் கல்லூரியும் தங்கப்பழம் கல்வி குழுமத்தின் சார்பில் இன்று காலை 10 மணிக்கு திறப்புவிழா நடைபெற்றது.இந்த நிகழ்வில் தமிழக சட்டப்பேரவை தலைவர் எம். அப்பாவு,சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் பி ஆகாஷ், உயர்நீதிமன்ற நீதிபதிகளும்,நாடாளு மன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்,தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன், உள்ளாட்சி அமைப்புக்களின் தலைவர்கள்,உறுப்பினர்கள்,உள்ளிட்ட ஏராளமானவர்கள் விழாவில் பங்கேற்றனர் இதற்கான ஏற்பாடுகளை தங்கப்பழம் கல்வி குழும நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags :