பெண் கிணற்றில் தள்ளி கொலை

by Staff / 11-11-2022 02:06:16pm
பெண்  கிணற்றில் தள்ளி கொலை

கரூர் மாவட்டம் தோகைமலை அடுத்த பெரியவீட்டுக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி மனைவி வசந்தா(39). கூலித்தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் மனைவி சரோஜா (45) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.இந்நிலையில் நேற்று வசந்தா அதே பகுதியில் உள்ள தனது வயலுக்கு சென்றபோது அங்கு வந்த சரோஜாவுக்கும், வசந்தாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வசந்தாவை களைவெட்டியால் சரோஜா தாக்கியுள்னார். இதில், தலையில் படுகாயமடைந்த வசந்தாவை, சரோஜா அருகில் இருந்த கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு அங்கிருந்து ஓடினார்.

இதனிடையே வசந்தாவை காணவில்லை என தேடிவந்த முத்துசாமி தனது மனைவி கிணற்றில் சடலமாக மிதப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவலறிந்த தோகைமலை போலீசார் வசந்தாவின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதில், சந்தேகத்தின்பேரில் சரோஜாவை பிடித்து விசாரித்தபோது, அவர் வசந்தாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சரோஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். முன் விரோதத்தில் பெண்ணை மற்றொரு பெண் அடித்து கிணற்றில் தள்ளிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via