ரீல்ஸ் செய்த மனைவியை துண்டுதுண்டாக வெட்டிய கணவன்

by Staff / 15-07-2024 01:36:30pm
ரீல்ஸ் செய்த மனைவியை துண்டுதுண்டாக வெட்டிய கணவன்

தெலங்கானாவின் உப்பல் பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் போலா. இவரது மனைவி மதுமிதா (வயது 24). இவர்களுக்கு 10 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடும் பழக்கமுடைய மதுமிதா அதிலேயே மூழ்கியிருந்துள்ளார். பிரதீப் கண்டித்தும் ரீல்ஸ் செய்வதை மதுமிதா நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பிரதீப், மதுமிதாவை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி, குளியலறையில் வைத்துவிட்டு குழந்தையுடன் தலைமறைவாகிவிட்டார். தற்போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via