நண்பனுக்காக உயிரை மாய்த்த சோகம்

by Staff / 13-11-2022 01:40:37pm
நண்பனுக்காக உயிரை மாய்த்த சோகம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியைச் சார்ந்தவர்கள் பிரபு மற்றும் சீனிவாசன். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாவர். இருவருமாக பைக்கில் சென்றுக் கொண்டிருந்தப் போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. பைக்கை பிரபு ஓட்டி வந்த நிலையில் அவர் காயடைந்தார், பின்னால் அமர்ந்திருந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிகிறது.காயடைந்த பிரபு, சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் நண்பனை இழந்த துக்கம் தாங்காமல், தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via