கோவையில் மது அருந்திய 2 பேர் கவலைக்கிடம்..
![கோவையில் மது அருந்திய 2 பேர் கவலைக்கிடம்..](Admin_Panel/postimg/10 ded.jpg)
கோவை பொள்ளாச்சி அருகே நேற்று (ஜூன் 29) ரவிச்சந்திரன் (55) மற்றும் மகேந்திரன் (46) ஆகியோர் மது அருந்திய நிலையில் வாந்தி வயிற்றுப்போக்கு மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், உடனடியாக இருவரையும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கள்ளச்சாராயம் குடித்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக போலீசாருக்கு சிலர் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, இருவருக்கும் வெவ்வேறு காரணங்களுக்காக உடல் நிலை பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :