சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் கைது

by Editor / 03-09-2021 03:15:18pm
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேர் கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மீனாட்சிபுரம் அம்பேத்கர் நகரை சேர்ந்த அந்தோணி மகன் பாண்டியன் (வயது 30) கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி பழனியம்மாள் என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளதுஇந்தநிலையில் அப்பகுதியில் 8-ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தார். இதையறிந்த பாண்டியன் அங்கு சென்று மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அலறியடித்த மாணவி, வீட்டை விட்டு வெளியே வந்து வேலைக்குச்சென்று வீடு திரும்பிய பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்லம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது பாண்டியன் மட்டுமின்றி பக்கத்து வீட்டை சேர்ந்த 18 வயதான வாலிபர் ஒருவரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியதும் தெரியவந்தது.இதையடுத்து பாண்டியன் உள்பட 2 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via