எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் மரியாதை

by Staff / 24-12-2022 12:17:20pm
எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் மரியாதை

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாளையொட்டி, எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக வந்து மரியாதை செலுத்தினர்.சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியாக வந்து எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via