குடிபோதை தகராறில் இளம்ஜோடி மரணம்

by Staff / 04-10-2023 01:54:55pm
குடிபோதை தகராறில் இளம்ஜோடி மரணம்

கல்யாணம் முடிந்த வெறும் 4 மாதங்களில் கணவன், மனைவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தது சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மது என்று கூறப்படுகிறது. சென்னை தாம்பரத்தில் நேற்று மது குடித்துவிட்டு வந்த கணவனிடம் மனைவி வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனால் கணவன் வீட்டை விட்டு வெளியேறியதால், மனா உளைச்சலுக்கு ஆளான மனைவி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். இதனை தொடர்ந்து இதைப் பார்த்த கணவனும், அதே மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
 

 

Tags :

Share via