இளைஞரை கத்தியால் குத்திய ரவுடிகள்

by Staff / 05-04-2023 05:32:39pm
இளைஞரை கத்தியால் குத்திய ரவுடிகள்

நாட்டில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும், குற்றவாளிகளின் நடமாட்டம் அதிகரித்து கொண்டேதான் உள்ளது. இந்த குற்றவாளிகள் பொது மக்களை பயங்கர ஆயுதங்களால் தாக்கும் சம்பவங்களும் அவ்வபோது நடக்கின்றன. சமீபத்தில், உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் இதுபோன்ற சம்பவம் நடந்தது. ஜமுனாபர் காவல்நிலையத்தில் இளைஞர் ஒருவர் ரவுடிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டார். பின்னர் அந்த இளைஞரை ரவுடிகள் கத்தியால் குத்தினர். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo