சாதனை படைத்த பிரக்ஞானந்தா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

by Staff / 18-08-2023 11:50:55am
சாதனை படைத்த பிரக்ஞானந்தா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலககோப்பை செஸ் போட்டி தொடர் அர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா 5-4 எனும் வெற்றி வீதத்தில் அர்ஜுன் எரிகேசியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்த்க்கு பிறகு உலக கோப்பை செஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய 2வது இந்திய வீரர் எனும் பெருமையை பெற்றார் பிரக்ஞானந்தா. உலககோப்பை செஸ் போட்டியில் அரையிறுதி வரை சென்றுள்ள பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via