மாணவி பிரியாவின் உயிரிழப்பிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல்

by Staff / 15-11-2022 03:40:30pm
மாணவி பிரியாவின் உயிரிழப்பிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல்

மாணவி பிரியாவின் உயிரிழப்பிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ல ட்விட்டர் பதிவில், ”அறுவை சிகிச்சையின் போது அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை வழங்கியதால் கல்லூரி மாணவி, கால்பந்து வீராங்கனை சகோதரி பிரியா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

தவறான சிகிச்சை வழங்கிய அரசு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். திமுக அரசு, சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நஷ்ட ஈடாக இரண்டு கோடி ரூபாய் அவரது குடும்பத்தாருக்கு உடனடியாக வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via