ஹெட்செட் பயன்படுத்துவதால் காது கேளாமை ஏற்படும் அபாயம் ..?

by Editor / 17-11-2022 09:00:10am
ஹெட்செட் பயன்படுத்துவதால்  காது கேளாமை ஏற்படும் அபாயம் ..?

உலக சுகாதார நிறுவனம் உலகளவில் 430 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் BMJ குளோபல் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இளைஞர்கள் குறிப்பாக ஸ்மார்ட்ஃபோன்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் இயர்பட்கள் போன்ற தனிப்பட்ட கேட்கும் சாதனங்களைப் பயன்படுத்துவதால் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்துள்ளது.

அவர்கள் செய்த ஆராய்ச்சியின்படி, வயதுவந்தோர் மற்றும் இளைஞர்கள் 105 dB வரை அதிக ஒலியளவைத் தேர்வு செய்கிறார்கள் என்றும், அதே சமயம் 104 முதல் 112 dB வரையிலான பொழுதுபோக்கு இடங்களில் சராசரி ஒலி அளவுகள் அனுமதிக்கப்படும் அளவுகளை மீறுகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது. அதிக சத்தம் எழுப்பும் இடங்களில் பயனிப்பது சராசரியாக உயர்ந்துள்ளதாகவும், இதன் மூலம் இளைஞர்களின் காது கேட்கும் திறன் குறைந்து வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் 0.67 முதல் 1.35 பில்லியன் அதாவது 100 கோடி பேர், வயது வந்தோர் மற்றும் இளைஞர்கள் காது கேளாத அபாயத்தில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கணக்கிடுகின்றனர். “பாதுகாப்பான கேட்கும் நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலம் உலகளாவிய செவிப்புலன் இழப்பைத் தடுப்பதற்கு அரசுக்கு தொழில்துறை மற்றும் சிவில் சமூகம் முன்னுரிமை அளிக்க வேண்டிய அவசரத் தேவை உள்ளது” என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

 

 

Tags :

Share via